பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? காணி ஆசை கோடி கேடு. காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம். காப்பு சொல்லும் கை மெலிவை. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். காய்த்த மரம் கல் அடிபடும். காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது. கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை. காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி. காலம் செய்கிறது ஞாலம் செய்யாது. காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும். காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும். காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும். காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. காற்றில்லாமல் தூசி பறக்குமா? காற்று உள்ளபோதே தூற்றிக்கொள். காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும். கிட்டாதாயின் வெட்டென மற. கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? கீர்த்தியால் பசி தீருமா? கீறி ஆற்றினால் புண் ஆறும். குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா? குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை. குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும். குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா? குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது. குணத்தை மாற்றக் குருவில்லை. குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை. குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
|
எமது வலைதளங்கள் |