பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா? கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள். கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும். கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை. கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? கடல் திடலாகும், திடல் கடலாகும். கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? கடலுக்குக் கரை போடுவார் உண்டா? கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. கடவுளை நம்பினோர் கைவிடப் படார். கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி. கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது. கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும். கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும். கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது. கண் கண்டது கை செய்யும். கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா? கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான். கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும். கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும். கண்டது சொன்னால் கொண்டிடும் பகை. கண்டதே காட்சி கொண்டதே கோலம். கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு. கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ? கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா? கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது. கதிரவன் சிலரை காயேன் என்குமோ? கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
|
எமது வலைதளங்கள் |