பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம். ஏரி நிறைந்தால் கரை கசியும். ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை. ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும். ஏழை என்றால் எவர்க்கும் எளிது. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது. ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச் கோபம். ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது. ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா? ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள். ஒரு காசு பேணின் இரு காசு தேறும் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா? ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல். ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும். ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை. ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று. ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை. ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா! ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம். ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி. ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே. ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு. ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
|
எமது வலைதளங்கள் |