பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா? உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா. உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. உலோபிக்கு இரட்டை செலவு. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. உளவு இல்லாமல் களவு இல்லை. உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல. உள்ளது போகாது இல்லது வாராது. உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன். ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். ஊண் அற்றபோது உடலற்றது. ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான். ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு. ஊர் வாயை மூட உலைமுடி இல்லை. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல். எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்? எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. (நெருப்பில்லாது புகையாது) எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன? எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு. எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.
|
எமது வலைதளங்கள் |