http://www.siruvarulagam.com
சிறியோரும் பெரியோரும்
விரும்பும் இணையதளம்
     
செய்திகள்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு  -  முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்  -  தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்  -  ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு  -  அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்  -  தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு  -  கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ  -  சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு  -  2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி  -  கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை  -  தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்  -  அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி  -  சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி  -  பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்  -  ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை  -  உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா  -  நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது  -  "சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை  -  வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு  -  2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் பழகுவோம்

பழமொழிகள்

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

ஆரால் கேடு, வாயால் கேடு.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

ஆழமறியாமல் காலை இடாதே.

ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

ஆனைக்கும் அடிசறுக்கும்.




பழமொழிகள் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20

இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/tamil/proverbs2.html



பொழுது போக்கு
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs