http://www.siruvarulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
பொழுது போக்கு



தமிழ் பழகுவோம்


பழமொழிகள்

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

ஆரால் கேடு, வாயால் கேடு.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

ஆழமறியாமல் காலை இடாதே.

ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

ஆனைக்கும் அடிசறுக்கும்.



பழமொழிகள் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20

இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/tamil/proverbs2.html


சிறுவர் உலகம்


ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்