பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும். மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம். மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா? மண்டையுள்ள வரை சளி போகாது. மண்னுயிரை தன்னுயிர்போல் நினை. மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். மருந்தும் விருந்தும் மூன்று வேளை. மருந்தே யாயினும் விருந்தோடு உண். மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும். மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும். மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா? மவுனம் கலக நாசம். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும். மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே. மனம் உண்டானால் இடம் உண்டு. (மனமிருந்தால் மார்க்கம் உண்டு) மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. மனம் போல வாழ்வு. மனமுரண்டிற்கு மருந்தில்லை. மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி. மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம். மாடம் இடிந்தால் கூடம். மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா? மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது. மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும். மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை. மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான். மாரடித்த கூலி மடி மேலே.
|
எமது வலைதளங்கள் |