பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா? பசி வந்திடில் பத்தும் பறந்துபோம். பசியுள்ளவன் ருசி அறியான். பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய். பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும். படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். படையிருந்தால் அரணில்லை. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர். பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும். பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? பணம் உண்டானால் மணம் உண்டு. பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும். பணம் பந்தியிலே குலம் குப்பையிலே. பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை. பதறாத காரியம் சிதறாது. பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது. பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம். பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம். பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான். பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை. பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. பழகப் பழகப் பாலும் புளிக்கும். பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம். பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா? பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
|
எமது வலைதளங்கள் |