பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் நித்தம் போனால் முத்தம் சலிக்கும். நித்திய கண்டம் பூரண ஆயிசு. நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு? நித்திரை சுகம் அறியாது. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும். நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர். நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம். நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது. நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும். நீர் மேல் எழுத்து போல். நீலிக்குக் கண்ணீர் இமையிலே. நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும். நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? நூல் கற்றவனே மேலவன். நூலளவே யாகுமாம் நுண்ணறிவு. நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. நூற்றைக் கொடுத்தது குறுணி. நெய் முந்தியோ திரி முந்தியோ. நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? நெருப்பு என்றால் வாய்வெந்து போமா? நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ? நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும். நேற்று உள்ளார் இன்று இல்லை. நைடதம் புலவர்க்கு ஒளடதம். நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. நொறுங்கத் தின்றால் நூறு வயது. நோய் கொண்டார் பேய் கொண்டார். நோய்க்கு இடம் கொடேல். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம். பக்கச் சொல் பதினாயிரம். பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே. பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே. பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
|
எமது வலைதளங்கள் |