பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர். தவளை தன் வாயாற் கெடும். தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும். நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான். நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி. நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா! நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை. நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது. நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும். நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும். நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான். நயத்திலாகிறது பயத்திலாகாது. நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும். நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை. நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும். நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது நல்லது செய்து நடுவழியே போனால், நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும். நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம். நா அசைய நாடு அசையும். நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும். நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா? நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும். நாய் இருக்கிற சண்டை உண்டு. நாய் விற்ற காசு குரைக்குமா? நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை. நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம். நாலாறு கூடினால் பாலாறு. நாள் செய்வது நல்லார் செய்யார். நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
|
எமது வலைதளங்கள் |