பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும். சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும். சேற்றிலே செந்தாமரை போல. சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும். சைகை அறியாதவன் சற்றும் அறியான். சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா? சொல் அம்போ வில் அம்போ? சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது. சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர். சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை. சொல்வல்லவனை வெல்லல் அரிது. சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம். சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா. சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே. சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம். தங்கம் தரையிலே தவிடு பானையிலே. தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே. தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். தடி எடுத்தவன் தண்டல்காரனா? தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும். தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும். தண்ணீரையும் தாயையும் பழிக்காதே. தணிந்த வில்லுத்தான் தைக்கும். தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. தம்பி உடையான் படைக்கு அஞ்சான். தருமம் தலைகாக்கும். தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். தலை இருக்க வால் ஆடலாமா? தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா? தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன?
|
எமது வலைதளங்கள் |