http://www.siruvarulagam.com
சிறியோரும் பெரியோரும்
விரும்பும் இணையதளம்
     
செய்திகள்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு  -  முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்  -  தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்  -  ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு  -  அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்  -  தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு  -  கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ  -  சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு  -  2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி  -  கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை  -  தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்  -  அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி  -  சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி  -  பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்  -  ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை  -  உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா  -  நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது  -  "சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை  -  வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு  -  2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் பழகுவோம்

பழமொழிகள்

சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா.

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.

சாண் ஏற முழம் சறுக்கிறது.

சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சுக துக்கம் சுழல் சக்கரம்.

சுட்ட சட்டி அறியுமா சுவை.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.

சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்?

செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?

செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?

செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

செயவன திருந்தச் செய்.

செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?




பழமொழிகள் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20

இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/tamil/proverbs12.html



பொழுது போக்கு
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs