http://www.siruvarulagam.com
சிறியோரும் பெரியோரும்
விரும்பும் இணையதளம்
     
செய்திகள்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு  -  முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்  -  தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்  -  ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு  -  அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்  -  தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு  -  கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ  -  சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு  -  2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி  -  கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை  -  தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்  -  அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி  -  சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி  -  பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்  -  ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை  -  உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா  -  நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது  -  "சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை  -  வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு  -  2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் பழகுவோம்

பழமொழிகள்

குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

குப்பை உயரும் கோபுரம் தாழும்.

குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

குரங்கின் கைப் பூமாலை.

குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.

குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?

குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே.

குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்.

குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

கெட்டும் பட்டணம் சேர்.

கெடுக்கினும் கல்வி கேடுபடாது.

கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.

கெடுவான் கேடு நினைப்பான்.

கெண்டையைப் போட்டு வராலை இழு.

கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?




பழமொழிகள் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20

இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/tamil/proverbs10.html



பொழுது போக்கு
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs