பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள். குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை. குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும். குப்பை உயரும் கோபுரம் தாழும். குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா? கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு. குரங்கின் கைப் பூமாலை. குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது. குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன? குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது. குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே. குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி. குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும். குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம். கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே? கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும். கெட்டும் பட்டணம் சேர். கெடுக்கினும் கல்வி கேடுபடாது. கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது. கெடுவான் கேடு நினைப்பான். கெண்டையைப் போட்டு வராலை இழு. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான். கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
|
எமது வலைதளங்கள் |