பொழுது போக்கு |
இந்திய தேசிய இயக்கம் - 4 31. 1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை நிறுவினர்? அ. கோவா ஆ. சூரத் இ. கோழிக்கோடு ஈ. சென்னை 32. இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்? அ. மின்டோ ஆ. டல்ஹவுசி இ. கானிங் ஈ. ரிப்பன் 33. அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்? அ. பிரம்ம சமாஜம் ஆ. ஆரிய சமாஜம் இ. ராமகிருஷ்ண இயக்கம் ஈ. தியாசபிகல் இயக்கம் 34. சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்? அ. சி.ஆர். ரெட்டி ஆ. ஈ.வெ.ரா. பெரியார் இ. கே. காமராஜ் ஈ. செல்வராஜ் முதலியார் 35. இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்? அ. ஹென்றி விவியன் டிரெசியோ ஆ. ரவீந்திரநாத் தாகூர் இ. பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஈ. சுப்பிரமணிய பாரதி 36. பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது? அ. 1899 ஆ. 1900 இ. 1901 ஈ. 1905 37. தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல் வந்தார்? அ. 1902 ஆ. 1904 இ. 1909 ஈ. 1915 38. ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது? அ. 1917 ஆ. 1918 இ. 1919 ஈ. 1920 39. ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது? அ. 1932 ஆ. 1933 இ. 1925 ஈ. 1936 40. இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட ஒரே வைஸ்ராய் யார்? அ. ஹர்டிங்கே ஆ. நார்த்புரூக் இ. மயோ ஈ. மின்டோ விடை: 31. ஆ 32. ஆ 33. ஈ 34. ஆ 35. அ 36. ஈ 37. ஈ 38. இ 39. இ 40. இ
|
எமது வலைதளங்கள் |
| ||||||||||||||
|
|
|
|